Thursday, August 27, 2009

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

அறிக்கையும், விளக்கமும் பெற்றுக் கொள்வோம் ...!
நேற்று காலையில் இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமான நிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலப்படுத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்து விழுந்த தமிழ் போராளி பெண்களை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவ விட்டான் சிங்கள காடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்?

முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீ குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ் மக்களை நிர்வாணப்படுத்தி நடக்க வைத்தான் சிங்களன் என்ற பொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நாம்மில் பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?
தவிர்க்கவே முடியாமல் இந்தக் காணொளி தமிழக அணைத்து ஊடகங்களிலும் நேற்று முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன...

இதை அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா " இந்த சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான தூதரிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று, அல்லது விளக்கம் கேட்டுள்ளோம் என்று ...

நமக்குத் தான் தெரியுமே...! இவர்களின் விளக்கம், அறிக்கை குறித்து...நாம் அன்றாடம் இவர்கள் சொல்ல கேட்டுள்ளோம்.... பாகிஸ்தானுக்கு இவர்கள் கொடுக்கும் அறிக்கையும், விளக்கமும்...இதை அப்படியே பாகிஸ்தான் இவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதையும்...அதுபோல் இனிமேல் சிங்கள அரசிடம் இருந்தும் இனி அறிக்கை மற்றும் விளக்கம் வரும் ....!
இந்தியனாய் இருப்போம்...! தமிழர்களைக் கொள்வோம்..!

Thanks to: www.eeladhesam.com

No comments:

Post a Comment