Tuesday, August 18, 2009

தடம்புரண்ட திருமாவளவன்

திருமாவளவன்., ஈழம் எனும் உலகத்தமிழர்களின் கனவுக்கு உணர்ச்சிப் பங்காற்ற இன்னுமொருவர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியை சில காலம் முன்பு நமக்கு ஏற்படுத்திய மாவீரன்...

ஆனால் அதன் பின்பு, காலமும் ஓடியது, நாடளுமன்றத்துக்கு தேர்தலும் வந்தது.. அவர் கொண்ட கோலமும் மாறியது..

தன் குடும்பத்துக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் குழிதோண்டி புதைத்த கருணாநிதியிடம் பதவிக்காக மண்டியிட்டார்.

அதற்கு
முதல் நாள் வரை ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு முதற்க்காரணம் காங்கிரசும், அதன் தலைவி சோனியாவும் தான் என்று முழங்கிவந்த திருமாவளவன், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியா ஒருவரால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டுத்தமுடியும் என்று மகுடி ஊதினார்.

இப்போழுது மீண்டும் தன் பிறந்தனாள் பொதுக்கூட்டத்தை 'எழும் தமிழ் ஏழம்' என்ற பெயரில் கூட்டத்தைக்கூட்டி கொண்டாடியிருக்கிறார்.அதன் விளைவு மீண்டும் தேசியத்தலைவர் பற்றியும், விடுதலைப்போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது என தடை.

எடுத்தற்கெள்ளாம் மத்திய அரசை பற்றி மட்டும் குற்றம் சாட்டும் திருமாவளவன், காங்கிரசுக்கு ஒத்து ஊதும் ஜால்ரா தமிழக முதல்வர் கருணாநிதியை பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏனோ கைது பயமா?..
இல்லை வாயைத்திறக்க முடியாத அளவிற்க்கு கட்டு கட்டாக எதையும் வைத்து வாயை அடைத்து விட்டார்களா?..

இவரை இப்போது பார்க்கும் போதெல்லாம், தன் குடும்பத்தினர்களுக்கு விருப்பபட்ட துறைகளை அமைச்சர் பதவிகளாக வாங்க டெல்லியில் முகாமிட்டு வாங்கிவந்த கருணாநிதியின் பின்னால் இவர் பம்முவதை பார்க்கும் போதெல்லாம், குள்ள நரியின் பின்னால் அதன் எச்சிலை பொறுக்கி திங்க திரியும் பூனையை போல் தன் இப்போது தெரிகிறார்.

வாழ்க திருமா.. வாழ்க திருமாவின் தமிழ்ப்பற்று...

No comments:

Post a Comment