Wednesday, September 2, 2009

தமிழ் நாட்டின் தமிழர்களே!

எமது அன்பு சகோதரங்களே! தமிழ் நாட்டின் தமிழர்களே! உங்கள் தொப்பிள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் மரண ஓலம் கேட்க வில்லையோ ?

நாங்கள் இலங்கைத்தீவில் தமிழர்களாக பிறந்த ஒரே காரணத்தால் இலங்கையில் பெரும்பாண்மை இனமான சிங்களவர்களினால் அடக்கி அடிமைகளாக்கபட்டு எமது பெண்களும், எமதருமைக்குழந்தைகளும், ஈன இரக்கமின்றி சிங்களத்தின் கொடூர பற்களினால் குதறி எறியபடுகின்றனர். ஈழத்தமிழர்களாகிய எமக்கு உயிர் உத்தரவாதம் ஏதுமின்றி சொல்லொன்னா துயரங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்க படுகின்றோம்.

எங்களின் இதய தேசமான எமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்பட்டு
எமது நிலங்களும், சொத்துக்களும், சிங்களவர்களினால் சூரையாட படுகின்றன.

இலங்கைத்தீவின் தன்மானத்தமிழர்களாகிய நாம், எமக்காக பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து எறிய, முப்பத்தைந்து ஆண்டு காலத்துக்கு மேலாக யாருடைய உதவியும் இன்றி, தமிழ் இனத்தின் உரிமை காக்க, வீரம் நிறைந்த எமது தமிழ் வீர மறவர்களோடும், நீதி தவறாத, சாணக்கியமும், வீரமும் நிறைந்த மகத்தான தமிழன், எமது பெருமதிப்பிற்குரிய தேசியத்தலைவரோடும், தமிழீழ மக்களின் ஈடு செய்திட முடியாத அர்ப்பனிப்போடு இரத்தத்தால் எழுதிய வீர விடுதலை வரலாறு படைத்தோம், இவ் உலகத்தில் தமிழர்களாகிய நாம் தலை நிமிர்ந்து நின்றோம்.

எம் தாய்த் தமிழ்நாடே, எமது ஆறு கோடி தமிழ் உறவே, பூ கோளம் எங்களை பிரித்தாலும், தமிழால், கலை-கலாச்சாரத்தினால், பண்பாடுகளினால் இன உணர்வால் நாம் ஒன்றுபட்டவர்கள். உங்களுக்காகவே பாரத தேசத்தை, எம் அன்னை தேசமாக பார்தோம். ஆனால் பாரத தேசம் உட்பட இருபதுக்கு மேற்பட்ட மனிதநேயம் அற்ற நாடுகள், இலங்கைத் தீவீல் பெருபாண்மை இனமான சிங்களவர்களுடன் இனணந்து, தமிழ் இனத்தின் பாரிய வளர்ச்சிகளை கண்டு அஞ்சி, பொறாமை கொண்டு எமது நீதியான நியாயபூர்வமான போராட்டத்தை சிதைத்ததுடன், அதை கொச்சைப்படுத்தி லட்சக்கணக்கான எம் தமிழ் உறவுகளை சாட்சியங்கள் ஏதும் இன்றி இனப்படுகொலை செய்ததுடன்,மிகப்பெரியதோர் மனித அவலத்தை உருவாக்கி தமிழர்களாகிய எமக்கு அநீதி அளித்தனர்.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய எமது தொப்பிள் கொடி உறவுகளான உங்களையே, பாரத மத்திய அரசின் சதியாலும், சூழ்ச்சியாலும், பல கோடி ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு தமிழ் இனமானத்தை விற்ற தமிழ் நாட்டின் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் திமுகவின் துரோகத்தனத்தாலும். எம் தாய் தமிழக உறவுகளான உங்களையே பகடைக்காய்களாக பயண்படுத்தி தமிழர்களாகிய எமது தலைவிதியை தலை கீழாக மாற்றி, தலைகுனிய வைத்ததுதான். சுருக்கமாக சொல்வதென்றால், எமது விரல்களைக்கொண்டே எமது கண்களை குத்தியதுதான்.

தமிழ் நாட்டின், தமிழ் இன உணர்வு அற்ற செயற்பாட்டினால்,

• தமிழ் இனத்தின் மானம் காக்கும் மறத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் தடை.

• பரிதவித்து வரும் பாவப்பட்ட தமிழருக்கு, அகதிமுகாம் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகள்.

• தமிழ் இனத்திற்காக உயிர்கொடுத்துப் போராடும் தமிழகத்தின் எமது தொப்பிள் கொடி உறவுகள் மீது, தமிழ௧க்காவல்த்துறையின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகள்.

• பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக் கொண்டு, சிங்ளவன் கொடுக்கின்ற தகவல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழர்கள் படும் துயரங்கள், அநர்த்தங்கள் ,அவர்களுடை நியாய பூர்வமான போராட்டத்தை, எழுதவோ எடுத்துக்காட்டவோ தவறிய தமிழ்நாட்டின் தமிழ்த் தொலைகாட்சிகள் தமிழ்ப் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள்.

• தனி ஈழம் அமைந்துவிடும், தனித் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்று ௭ண்ணி, தமிழ் இனத்தை அழிக்க, அமைதிகாக்கும் படையென்ற போர்வையில் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை குடித்து, பாரிய ராணுவ நடவடிக்கைகளையும், பாரிய ராணுவ உதவிகளையும், சிங்கள அரசுக்கு வழங்கி, தமிழர்களை அடிமைகளாக்கிய பாரத நாட்டின் காங்கிரஸ் கட்டமைப்புக்கு, வாக்களித்து ஆட்சி பீடத்துக்கு அனுப்பிய, தமிழ் இனத்திற்கு துரோகம் விலைவித்த ஈனம் அற்ற தமிழர்கள்.

• லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடிமைகளாக அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க மறுக்கும் இரக்கமற்ற தமிழகத்தின் தமிழ் மக்கள்.

தமிழகமே, தாய் நிலமே, எம் சனமே, எம் இனமே, நாம் உறைந்த சாக்கடை போல் அசைவற்று இருந்தோமேயானால் தமிழ் இனம் நாறும், தமிழர் மானம் போகும், பொங்கி எழுங்கள் புத்துயிர் பெறுங்கள்,தமிழர்களாகிய நாம் ஒன்றுபடுவோம். சீக்கியனும், சிங்களவனும், ஆள்வதற்கா, தமிழர்களாய் நாம் பிற்ந்தோம் ?

தமிழர்கள் வாழ்வை இருள் ஆக்கி, தனக்காகவும் தன் குடும்பத்துக்காகும் அரசியல் நடத்தும் சுயநலவாதி கருணா(நாய்)நிதி, தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபகேடு. பச்சிளம் குழந்தைகள் பரிதவித்து சாவதைப் பார்த்தும், மனம் இரங்காத கொடும் அரக்கன்
நயவஞ்சகன், தமிழ் இனத்தின் மாபெரும் துரோகியை தமிழர் ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்.

தமிழ் மறவர்களே, உங்கள் திரு உடலையும் உயிரையும் தமிழுக்காய், தமிழர்க்காய், தீயியோடு சங்கமிப்பதை விட்டு விட்டு, எவனெல்லாம், தமிழினத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறானோ, தமிழர்களுக்கெதிராக தலை தூக்குகிறானோ அவன் தலையை துண்டியுங்கள். அதுவே தமிழ் அன்னைக்கு தமிழர்களாகிய நாம் செய்யும் பால் அபிஷேகம்.

தமிழகமே, பெருமதிப்பிற்குரிய புரட்சி தலைவர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சி காலத்துக்கு பிறகு வந்த ஆட்சியாளர் யாவரும் மாபெரும் சுயநலவாதிகளும் , தமிழ் இனபற்று அற்றவர்களே.

• தமிழர்களே, பொதுநலம் கொண்ட பச்சைத் தமிழன், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழும் தமிழன், தமிழர்களை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தமிழன், தமிழர்களின் வாழ்வை, வாழ்விடங்களை, கட்டியெழுப்பத் துடிக்கும் தமிழன், உலகத் தமிழனை அன்போடு ஆதரிக்கும் பண்புள்ள தமிழனை, தமீழகத்தில் இனம் கண்டு ஆட்சிப் பீடத்துக்கு அனுப்புங்கள்.

பாரத தேசம், உலக தமிழ் இனத்துக்கு, மனிதாபிமானம் அற்ற முறையில் செய்த துரோகத்திற்கு தமிழ் நாட்டின் தமிழர்கள் தனிதமிழ் நாடு அமைவதற்கான வாக்கெடுப்பொன்றை மேற்கொண்டு பிரிவினை போரை ஆரம்பித்தல் வேண்டும்.

உலகத்தமிழரின் அடிமை விலங்கை உடைத்து, இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களுக்கான புதிய வரலாறுடன் தமிழர் தேசங்கள் அமைப்போம்.

இந்த தமிழர் புரட்சியை தமிழர்களாகிய நாம் செய்யத் தவறும் பட்சத்தில், ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் தமிழ் இனத்தின் மானம் காக்க பிறந்தாலும், ஆயிரம் ஆயிரம்
முத்துகுமார்கள் தமிழர்களின் நல் வாழ்வுக்காய் மடிந்தாலும் தமிழர்களாகிய நாம் இவ் உலத்தில் நிரந்தர அடிமைகளே ! தன் பெயரில் நாடு உள்ளதென்று பெருமிதம் அடையும் அடிமைகள் நாடே தமிழ்நாடு.

பரிதவிக்கும் தமிழர்கள்.

No comments:

Post a Comment