Thursday, July 30, 2009

குற்றமற்ற ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டிலும் சிறை கருணாநிதியின் அன்பளிப்பு

செங்கல்பட்டில் ஈழத்தமிழனுக்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைச்சாலை இயங்கி வருவது ஈழத்தமிழருக்கு தெரிந்த‌ விடயம் ஆனால் தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறப்பு முகாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது தமிழ்நாட்டு தமிழ் மக்களை பொறுத்தவை அது சிறையா அல்லது சிறப்பு முகாமா என்பது தெரியாது காரணம் அரசியல்வாதிகள் மக்களை மந்தைகளாக்கி சுய நிணைவற்றவர்களாக வைத்துள்ளர். அதனால் மக்களுக்கு ஈழத்தமிழனுக்கு உதவிசெய்யும் முகமாக கேள்விப்பட்டுள்ளார்கள் ஆனால் உண்மையில் இந்த முகாமை நடத்துவது இந்திய மத்தியரசும்
மற்றும் சிறிலங்கா அரசும் தான் வெளிப்பார்வைக்கு தமிழ்நாட்டு அரசால் நடத்தப்படும் முகாம் போல் தெரியும் இங்கு உள்ள ஈழத்தமிழர்கள் எதுவித குற்றமற்ரவராக சந்தேகத்தின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருக்கும் முட்கம்பி வேலி சித்திரவதை முகாமிற்கு நிகராக இம்முகாம் நடத்தப்படுகின்றது இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகள் முடிந்து நீதிமன்றத்தால் குற்றமற்ரவர்கள் என்று தீர்ப்பு கூறிய‌ பின் ஈழத்தமிழன் என்ற ஒ ரே காரணத்துக்காக சிங்கள பேரினவாத அரசு போல்.தமிழ்நாட்டு அரசு.. இந்திய மத்தியரசுக்கும் மற்றும் சிறிலங்கா அரசுக்கும் கைப்பொம்மையாக தமிழ்நாட்டு அரசு செயல்பட்டு இந்திய சட்டதிட்டத்தையும் மீறி நிரபராதிகளான இவர்களை தமிழ்நாட்டு அரசு சிறைவைத்துள்ளது..செங்கல்பட்டு (சிறப்பு முகாம் )
சிறையில் மக்களை சுதந்திரமாக நடமாடவே அல்லது உறவினரை பார்க்கவே அனுமதிக்காமல் பல ஆண்டு காலமாக‌ சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தங்களை விடுதலை செய்யக்கோரியும் உறவினரை பார்க்க அனுமதிக்குமாறும் கோரி 29.07.09 இன்று ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர் இதில் இருவரின் நிலை படுமோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசினர் வைத்தியசாலையில் நேற்றயதினம் 28.07.09 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காந்திய தேசம்உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுக்கும் தேசம் என்று வாய்கிளிய கத்துபவர்கள் இன்றும் சரி என்று சரி உண்ணாவிரதத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்கள் அல்ல அன்று ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து திலீபன்உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தான்.

தேவதாசி குலத்தில் தெலுங்கருக்கு பிள்ளையாய் பிறந்த தட்சணாமூர்த்தியாகிய கருணாநிதிக்கு தமிழை படித்தால் மட்டும் தமிழ்பற்றே இனப்பற்றே வந்துவிடாது பிறப்பிலேயே தமிழனாக பிறந்தவனுக்கு தான் இனப்பற்றும் மொழிப்பற்றும் இருக்கும் இதுக்கு உதாரணம் கருணாநிதி...???

source: www.eeladesham.com

No comments:

Post a Comment